இப்படிக்கு இன்ஜினியர்

http://ashokmrin.blogspot.com

ashokmrin@gmail.com

========= ============


அட இது நம்ம எல்லாருக்கும் தெரிஞ்சது தான்!. IT கம்பெனின்னு ஒன்னு இருந்தா அதுல Project Team னு ஒன்னு இருக்கும். அதுக்கு ஒரு Project Manager, அப்புறம் சில Project members இருப்பாங்க. அந்த Team நிச்சயமா நானும் இருப்பேன்.


என்னை எப்படி கண்டுபிடிக்கலாம்னா, எப்பவும் எதையோ பறிகுடுத்த மாதிரியே இருப்பேன். ஏதாவது கேட்டா முகத்துல ஒரு சலனமே இல்லாம கடந்து போவேன்.


எப்பவும் வேற உலகத்துல இருக்குறதுனால எது சொன்னாலும் எனக்கு ரெண்டு முறை சொல்லணும். அந்த Floor இருக்க எல்லாரும் ஏதோ காமெடி சொல்லி சிரிச்சிகிட்டு இருப்பாங்க ஆனா நான் மட்டும் அமைதியா விட்டத்த பார்த்துகிட்டு இருப்பேன்.

எல்லாரும் சிரிச்சி முடிச்சி 2 நிமிஷம் அப்புறம் திடீர்னு நான் மட்டும் சிரிப்பேன்.

அப்பாடா இப்போவாவது சிரிச்சியே னு யாராவது கேட்டா, நேத்து நீ ஒரு காமெடி சொன்னியே அத நெனச்சேன் சிரிச்சேன்னு சொல்லுவேன். , இப்போ தான் நேத்து சொன்ன காமெடிக்கு வந்து இருக்கியான்னு நெனச்சிகிட்டு கேள்விகேட்டவர் கிளம்ப வேண்டியது தான்.


ஒரு நாள் அப்படி தான் என்னோட நண்பனை பார்த்து,

"இன்னைக்கி lunch சாப்பிட்ட புளிசாதம் புளிப்பாவே இல்லைல ? " என்றேன்.
டேய் நீ சாப்பிட்டது பிரியாணிடா என்றான் நண்பன்!.
அப்புறம் ஏன் அதுல சிக்கன் இருந்தது?
சிக்கன் பிரியாணில வேற என்னடா இருக்கும்?
சிக்கன் பிரியாணியா? (எதை சொன்னாலும் ரெண்டு முறை சொல்லனும்னு சொன்னது Tally ஆகுது பார்த்தீங்களா?).


நான் ஏன் இப்படி இருக்கேன்னு தெரிஞ்சிக்கணும்னா அதுக்கு தேவை ஒரு Tortoise கொசுவத்தி சுருள். அத சுத்திகிட்டே உள்ள போய் பார்த்தோம்னா.....


==============================================================================
காலை மணி 10:00, எங்க கம்பெனிக்கு முன்னாடி இருக்க பிள்ளையார் கோயில்.
"
சாமி, இன்னைக்கி என்னோட Project Manager சந்தோஷமா இருக்கணும். அவருக்கு கோபம் வராம நீ தான் பார்த்துக்கணும். அப்புறம் அந்த விஜய். அவன் என்னைப்பத்தி PM கிட்ட எதுவும் போட்டுகுடுக்காம இருக்கணும்."


என்னடா இவன், அம்மா, அப்பா நல்லபடியா இருக்கணும், ஊர்ல உலகத்துல நல்லா மழை பெய்யனும்னு வேண்டிக்காம.......கண்டதை வேண்டிக்கிறானே, ஒரு வேலை லூஸா இவன்னு உங்களுக்கு நினைக்க தோணும். ஆனா நான் இன்னைக்கி இப்படி ஆனதுக்கு காரணம் மேல சொன்னா அந்த ரெண்டு பேரும் தான்.


விஷயத்துக்கு போறதுக்கு முன்னாடி, அந்த ரெண்டு பேர் பற்றி கொஞ்சம்......
Project Manager :
கரிக்களாம்பட்டி ஆடு மேய்ச்சிகிட்டு இருந்தவரு மாதிரி இருப்பாரு. ஆனா சாப்ட்வேர் கம்பெனில வேலை. இயர் 2000 அடிச்ச Java சுனாமில அங்க இங்க புடிச்சி PM ஆனவரு.
அவருக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு அவரை தவிர எல்லாருக்கும் தெரியும். நல்ல மனுஷன் தான். ஆனா கொஞ்சம் லூஸு.


விஜய் : இவன் என்னோட டீம் தான். Team Member. சரியான ஜால்ரா. PM க்கு இவன் மேல ஒரு தனி மரியாதை. PM ஆபீஸ் வாசல்ல வரப்போவே கைல ஜால்ராவ எடுத்து ரெடியா வச்சிக்குவான். அவரு வந்து எது சொன்னாலும் ஒரு அடி அடிப்பான், ஜால்ராவதான்.


ஒரு நாள் டீம் மீட்டிங் நடந்தது. போன வாரம் வரைக்கும் fast வேலை செய்துகிட்டு இருந்த எங்களோட product இந்த வாரம் ரொம்ப slow ஆயிடுச்சி. அது பற்றி அலச தான் அந்த மீட்டிங்.


PM : என்ன ஆச்சி திடீர்னு? ஏன் response time increase ஆயிடுச்சி?
நான்: தெரியல சார்.
PM :
போன வாரம் நம்ம சர்வர் 3rd floor இருந்து 4th floor க்கு shift பண்ணாங்களே, அதனால இருக்குமா?
விஜய்: கரெக்ட் சார், Client PC, ground floor இருக்கு. distance அதிகம் ஆக ஆக system slow ஆகுதுன்னு நெனைக்கிறேன். சர்வரையும் Client PC யையும் ஒரே Floor வச்சா எல்லாம் சரி ஆயிடும்னு நெனைக்கிறேன்.
நான்(மனசுக்குள்) : "ஏன், ரெண்டு CPU வையும் சணல் போட்டு கட்டி வைங்களேன். இன்னும் வேகமா இருக்கும்". மனசுல நெனச்சத சொல்ல முடியுமா...அதுக்கு நாம விஜய் ஆக இருக்கணும்.
PM :
Brilliant விஜய் i appreciate your idea. i will talk to the network team. Arun (என்னோட பெயர் தான்), நீங்க விஜய் கிட்ட இருந்து கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. ஒரு ப்ராப்ளம் சொன்னா விஜய் மாதிரி ஒரு Solution சொல்லணும் புரிஞ்சிதா?
நான் : ஓகே சார்.
மீட்டிங் முடிஞ்சது. விஜய் முகத்துல ஒரே பெருமை. Recession 2008 சரி பண்ணிட்ட மாதிரி.
=======================================


ஒரு நாள், PM திடீர்னு என்னோட மொபைல்க்கு கால் பண்ணி, அருண், உடனே என்னோட Cabin க்கு வாங்க என சொல்லி இணைப்பை துண்டித்தார்.

நான் எங்க இருக்கேன், என்ன பண்ணிக்கிட்டு இருக்கேன்னு கூட கேக்காம, கிராமத்து திருவிழா Mic , "முனியாண்டி எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்னு " சொல்லுவாங்களே அந்த மாதிரி சொன்னார்.

அதான் தெளிவா "எங்கிருந்தாலும்" னு சொல்லிட்டாங்களே, அப்போ முனியாண்டி எங்க இருந்தாலும் உடனே மேடைக்கு போக வேண்டியது தான். அதே மாதிரி நானும் போய் நின்றேன்.


நான் : Excuse me sir.
PM:
அருண், என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க?
நான்: Restroom இருந்தேன் சார்.
PM: Office Time la
என்ன Restroom வேலை? இனிமே working hours Restroom போய் பாருங்க சொல்றேன்.


என்னடா இந்த மனுஷன் இதுக்கு கூட இப்படி கத்துறாரேன்னு நாம கோபப்பட கூடாது. ஏன்னா, Restroom னா ஏதோ பாய், தலாணி எல்லாம் போட்டு படுத்து தூங்குற இடம்னு நெனச்சிகிட்டு இருக்காரு. வேணும்னா அவர் சொன்னத மறுபடி படிச்சி பாருங்க.


அதுனால, "ஓகே சார் இனிமே படிப்படியா கொறச்சிக்கிறேன்" னு சொன்னேன்.
PM:
அது என்ன படிப்படியா? ஒரேயடியா குறைங்க இல்லன்னா இந்த issue உங்க appraisal reflect ஆகும்.
நான்: Ok Sir.
PM : You spoiled my mood. You may go.
நான் : யோவ், நீ கூட தான் spoil பண்ணிட்ட. நான் எங்க போய் முட்டிக்கிறதுன்னு நெனச்சிகிட்டு வந்துட்டேன்.
=======================================


அடுத்த நாள், PM எல்லாரையும் கூப்பிட்டார். போனோம்.
PM: See,
நான் நேத்து அனுப்புன requirement document படிச்சீங்களா? Is it technically possible?
நான் : படிச்சேன் சார். ஆனா அவுங்க கேக்குற functionality இப்போ use பண்ற Technology பண்ண முடியாது சார்.
PM :
நீங்க ஒரு useless resource அருண் எப்பவும் negative response தான் குடுப்பீங்க. நீங்க என்ன நினைக்கிறீங்க விஜய்?
விஜய்: Well, According to the White paper released by Microsoft on 30th May in a Technical conference held in California, USA(இன்னும் மேட்டர்க்கு வரல கவனிச்சீங்களா? ). It clearly explains that the technical requirement given by our customer(டேய் போதும் விடுடா) cannot be achieved in the given situation.(அப்பாடா முடிச்சிட்டான்).
PM: Very Good
விஜய். I understood. Arun, பார்த்தீங்களா? இப்படி இருக்கணும்.
நான்(Mind Voice): யோவ், நான் சொன்னதுக்கும், அவன் சொன்னதுக்கும் என்ன வித்யாசத்த கண்டுட்ட? . நீ மயங்குன அந்த நாலு வார்த்தை எனக்கும் தெரியும், White Paper, Conference, California. இது வரைக்கும் News Paper தான் கேள்வி பட்டு இருப்ப, அவன் White Paper னு சொன்னதும் சாஞ்சிட்ட அதான?


இப்படி நாளுக்கு நாள் PM மேலயும் விஜய் மேலயும் என்னோட கோபம் அதிகமான நேரத்துல........


"இப்படிக்கு இன்ஜினியர்"....ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்கு பிறகு தொடரும்.!
==============================================================================
இனிக்க, மணக்க, சுவைக்க அர்ச்சனா...!
நான் தாங்க இந்த படைப்பை எழுதிகிட்டு இருக்கவன் பேசறேன். என்னுடைய படைப்புக்களை படிக்கிற உங்களுக்கு மிக்க நன்றி. இதைப்பற்றிய உங்களோட மேலான கருத்துக்களை, கீழ்கண்ட Blogspot ல் பதிவு செய்யலாம்.
http://ashokmrin.blogspot.com
இது தவிர என்னுடைய எல்லா படைப்புக்களும் உங்களுக்கு உடனுக்குடன் வந்து சேர, உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை(Email ID) எனக்கு (ashokmrin@gmail.com
)
அனுப்பினால், படைப்புகள் தயாரான உடனே அனுப்பி வைக்கப்படும். அதெல்லாம் ஒன்னும் வேணாம். அது வரப்போ வரட்டும் படிச்சிக்கிறேன் னு சொன்னாலும் சரிதாங்க. எல்லாம் உங்க சவுகரியம் தான்.
என்னுடைய மின்னஞ்சல் முகவரி, ashokmrin@gmail.com
மீண்டும் சந்திப்போம்!
==============================================================================
இப்படிக்கு இன்ஜினியர்....தொடர்கிறது!!


இப்படி நாளுக்கு நாள் PM மேலயும் விஜய் மேலயும் என்னோட கோபம் அதிகமான நேரத்துல........


PM: Arun, Effort estimation அனுப்ப சொல்லி இருந்தனே ஏன் இன்னும் அனுப்பல?
நான்: சார், நான் 1 Hour முன்னாடியே அனுப்பிட்டனே.
PM:
அது எவ்வளவு முக்கியமான மெயில்...Send Button ஒழுங்கா Click பண்ணியா?
நான்: பண்ணேன் சார்.
PM:
அப்போ ஏன் இன்னும் வரல...ஆங்....ஞாபகம் வந்துடுச்சி...LAN Cable மேல கால் வச்சிக்கிட்டு இருக்கியா? (!!!!!!!!)
நான்: ஆமாம் சார்.
PM: You Nonsense, First Lan Cable
மேல இருந்து காலை எடு.
நான்: எடுத்துட்டேன் சார்.
PM:
இரு mailbox refresh பண்ணி பாக்குறேன். அப்பாடா மெயில் வந்துடுச்சி. நீ கால் வச்சிக்கிட்டு இருந்ததால மெயில் அங்கேயே மாட்டிகிட்டு இருந்து இருக்கு. இனிமே LAN Cable மேல கால் வைக்காத OKவா? !!!
நான்: இந்த விஷயத்த யார் சார் சொன்னது உங்களுக்கு?
PM :
நம்ம விஜய் தான்.
நான்: நெனச்சேன்(Mind Voice). எப்போ சார் சொன்னான்?
PM:
அன்னைக்கி ஒரு நாள், நான் அவனுக்கு மெயில் அனுப்பிட்டு வந்துடுச்சான்னு செக் பண்ண சொன்னேன். ஆனா ரொம்ப நேரமா அவனுக்கு ரீச் ஆகல. நான் LAN Cable மேல கால் வச்சிக்கிட்டு இருக்கனான்னு விஜய் கேட்டான். ஆமாம் னு சொன்னேன். கால் எடுக்க சொன்னான். எடுத்தேன். உடனே மெயில் ரீச் ஆயிடுச்சி. அப்புறம் விஜய் அதுல இருக்க technical matter explain பண்ணினான். இதுல இப்படி ஒரு விஷயம் இருக்குன்னு அப்போ தான் எனக்கு புரிஞ்சது. நல்ல Learning.!!!
நான்:அட தூ(Mind Voice)! Ok sir!
=======================================


எல்லாரும் ஆவலோட எதிர்பார்த்துகிட்டு இருந்த appraisal வந்தது.

Senior Software Engineer ஆன நான் இந்த முறை எப்படியும் Team Lead ஆயிடுவேன்னு ஒரு எதிர்பார்ப்பு. PM அழைத்தார். appraisal meeting.


PM: வாங்க அருண். சொல்லுங்க, இந்த appraisal year நீங்க என்ன என்ன செஞ்சீங்க?


நான் 20 நிமிடம் பேசினேன். என்னுடைய சாதனைகளைப்பற்றி. எல்லாவற்றையும் கேட்டுவிட்டு. சாவகாசமாக சொன்னார் PM.


PM: எல்லாம் சரி, அதனால கம்பெனிக்கு எந்த லாபமும் இல்லையே. To be frank, உங்கள கம்பெனிய விட்டு தூக்கிட்டா கூட எந்த பாதிப்பும் இல்லைன்னு தான் management நெனச்சிகிட்டு இருக்காங்க. அப்புறம், Team உங்களுக்கு அவ்வளவு நல்ல name இல்லைன்னு Feedback வந்து இருக்கு. So, நீங்க இன்னும் நிறைய கத்துக்கணும், உங்க எல்லா தப்பையும் திருத்திக்கனும். உடனே திருத்திக்கனும்னு இல்லை, ரெண்டு நாள் டைம் தரேன்!!. நீங்க போகலாம்.


நான்: Thank You Sir!
=======================================
அடுத்த candidate விஜய்.
உள்ளே என்ன நடக்குதுன்னு ஒட்டுக்கேட்டேன். தவறு தான். ஆனா அப்போ தான உங்களுக்கு சொல்ல முடியும்!.
PM:
வாங்க விஜய். எப்படி இருக்கீங்க?
விஜய்: நல்லா இருக்கேன் சார்.
PM:
அப்புறம் எங்க Lunch சாப்டீங்க?
விஜய்: ஆயா மெஸ் சார்.
PM:
எங்க இருக்கு அது?
விஜய்: அது Pondy Bazaar இருக்கு சார்.
PM:
அப்படியா... Appraisal க்காக தான் வரசொன்னேன். இந்த முறை Project Lead position வேணுமா இல்லை Team Lead Position வேணுமா?
விஜய்: சார், Step by Step வளரணும்னு நெனைக்கிறேன் அதுனால, இந்த முறை PL போதும், Next Year TL ஆகிக்கிறேன்.
PM:
உங்ககிட்ட எனக்கு பிடிச்சதே இது தான். நானும் அதையே தான் நெனச்சிகிட்டு இருந்தேன். So, இந்த முறை உங்களுக்கு PL குடுக்குறேன். Next Year TL Ok ?
நான்(Mind Voice): என்னது....PL க்கு அப்புறம் TL ? கரகாட்டக்காரன் கவுண்டமணி சொல்றமாதிரி "டீ க்கு அப்புறம் மோராடா? " என தோன்றியது.
விஜய்: Ok Sir.
=======================================


ஒரு மாதத்திற்கு பிறகு Appraisal result வந்தது. எதிர்ப்பார்த்தது போலவே விஜய் PL ஆகிவிட்டான்.

Senior Software Engineer ஆக இருந்த என்னை "Developer"!! ஆக பதவி இறக்கம் செய்துவிட்டார்கள்.


நேராக நம்ம பிள்ளையார் கோவிலுக்கு போனேன்.

இப்படி பழிவாங்கிட்டியே பிள்ளையார். எவ்வளவு கெஞ்சினேன் ஆனாலும் என்னோட வேண்டுதல் உன்னோட காதுல விழல இல்லை? சரி போனது போகட்டும், அடுத்த Appraisal வரைக்கும் இந்த கம்பெனில இருந்தா கண்டிப்பா என்னை "Fresher" ஆக்கிடுவாங்க அதுக்குள்ளயாவது வேற ஏதாவது கம்பெனில வேலைக்கு ஏற்பாடு பண்ணிடு பிள்ளையார் என வேண்டிக்கிட்டு வீடு போய் சேர்ந்தேன்!


அடுத்த நாள் நான் முற்றிலும் மாறி இருந்தேன்...மீண்டும் Tortoise Reverse ல் சுற்றவும்!!

http://ashokmrin.blogspot.com

ashokmrin@gmail.com

10 comments:

  1. Very nice, Not only in IT Industry. In Other Production companies also we can see these kind of jalra people

    ReplyDelete
  2. The story is nice , But i felt there was no proper ending to the story

    The story completed like balu mahindra's flim ....

    ReplyDelete
  3. Hi Nandakumar...Thanks...appo..2nd part ezhudhava..?
    Illa venaaam....thaanga mudiyaadhu...idhuve podhumnu solriya?
    :)

    ReplyDelete
  4. I think you can write some other story not related to IT

    ReplyDelete
  5. Hi Ashok,
    Enjoyed reading it. But as Nadha said Please Please write something out of IT industry and rock again.
    This is my humble request... (Appudiye ivaru periya sujatha karuththu solla vanthutaarnu thitrathu en kaadhula vizhukuthu..:)

    ReplyDelete
  6. Hi Bala,
    Sollitteengalla..... inime IT patri...ezhudave maatten...idhu sathiyam....idhu sathiyam....idhu sathiyam!

    ReplyDelete
  7. hello ashok - first time visitor - ok ..naanum peter vidratha koncham kammi pannikarein.....

    unga mind voice anga anga solli kalakiteenga.. unmayale comedy super...

    ellam post i mean unga padivukala padichittein.. please continue posting more

    - Rajesh

    PS:ennada figure ethavathu comment podumnnu paartha , thiruppi evano oruthan potrukaanennu feel pannatheenga :)

    ReplyDelete
  8. Hello Rajesh,
    Ennoda mind voice a correctaa kandupidichitteengale.. :))
    Unmaiya sollanumnaaa... enakkulla ezhudhanumnu vidhai vidhachadhu kadavul...anaa andha vidhaikku thanni oothuradhu...ungala maadhiri nalla ullangal dhaan Rajesh...
    Mikka nandri.
    -Ashok M

    ReplyDelete
  9. Hi Ashok padaipugal superb, dayavu seidu namma mansion la thabgi irundha kadayum eludhunga, paarka romba aaval

    ReplyDelete