தாயுமானவள் !

B. Sc. படித்துக்கொண்டிருக்கும் நான், அன்று தான் ஒரு கம்ப்யூட்டர் சென்டெரில் பகுதி நேர Instructor ஆக பணியில் சேர்ந்தேன்.
Algorithm is nothing but step by step instructions used to solve the given problem என நடத்திக்கொண்டிருந்தேன். வகுப்பறையில் இருந்தவர்களில் ஒருவள் மட்டும் மிக வசீகரமாக இருந்தாள். யாரவள்? என்ன பெயர்? எதுவும் தெரியவில்லை.
அவளிடம் மட்டும் பெயர் கேட்டால் தவறாகிவிடுமென அனைவரையும் ஒருவர் பின் ஒருவராக அவர்களுடைய பெயர், படிப்பு போன்ற விவரங்களை சொல்ல சொன்னேன். அனைவரும் சொல்லிக்கொண்டே வந்தார்கள். நான் எதையும் காதில் வாங்காமல், அவள் முறைக்காக காத்துக்கொண்டிருந்தேன், வந்தது. பெயரை சொல்லப்போகிறாள் என என்னுடைய காதுகளை தீட்டி வைத்தேன். ஆனால் அவள் சொன்னது, "சாரி நான் ஸ்டூடென்ட் இல்லை". அதனாலென்ன பெயர் சொல்லுங்கள் என கேட்க நினைத்தேன். ஆனால் வேண்டாமென விட்டுவிட்டேன்.
க்ளாஸ் முடிந்து அனைவரும் சென்றுவிட்டார்கள். இவள் மட்டும் இன்னும் சென்டரிலேயே இருந்தாள். எனக்கு அவளிடம் எப்படியாவது பேசவேண்டும் போல இருந்தது. மூன்றாவது மாடியின் பால்கனியிலிருந்து ரோட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது பலமாக காற்று வீசியது. காலியாக இருந்த என்னுடைய சட்டை பாக்கெட்டில் காற்று வேகமாக உள்ளே சென்று அதைவிட வேகமாக வெளியேறியது. கிடைத்தது ஒரு உபாயம். நேராக அவளிடம் சென்றேன். ச்சே, காத்துல மேல்பாக்கெட்ல வச்சி இருந்த பத்து ரூபா அடிச்சிகிட்டு போய்டுச்சி என்றேன். அடடா...என்றாள். அப்பாடா பேசிவிட்டோமென எனக்கு ஒரே குஷி.

ஏன்டா வீட்ல இருந்து வெளில கெளம்புறப்போ தலைகீழா நின்னுட்டு கெளம்புரவன் நீ. உன்னோட பாக்கெட்ல பத்து ரூபாவா?

சைக்கிளுக்கு காத்து அடிக்கிறதுக்கு கூட பத்து பைசா கெடையாது, உனக்கு எதுக்கு இந்த விளம்பரம்? என எவனோ எனக்குள்ளிருந்து கேட்டான். அவனை எல்லாம் யார் சட்டை செய்தது.
அடுத்த நாளும் வந்தாள். என்னால் அவள் யாரென தெரிந்துகொள்ளாமல் இருக்க முடியவில்லை. கம்ப்யூட்டர் சென்டெர் ஓனரிடம் விசாரித்தேன். அதுவா, அவள் புஷ்பா, என்னுடைய தங்கை. B.Sc.படிச்சிமுடிச்சிட்டு இப்போ வீட்ல சும்மா இருக்கா. நான் தான் டைம் பாஸ்க்காக இங்க வரசொன்னேன்.
B.Sc முடிச்சிட்டாங்களா அப்போ என்னை விட ஒரு வயது மூத்தவர். இது தெரியாம அவசரப்பட்டு நேத்து நைட் தூங்காம விட்டுட்டனே. சரி இனிமே நல்ல நண்பர்களா இருப்போம்னு மனச தேத்திக்கிட்டேன்.
புஷ்பா சென்டரிலேயே இருந்ததால், பல விஷயங்கள் குறித்து பேசிக்கொண்டிருப்போம். எங்கள் நட்பு பலமானது.
ஒரு நாள் நான், புஷ்பா மற்றும் பலர் சென்டரின் கடைசி அறையில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். நான் கிளம்பும் நேரமாதலால், சரி நான் கெளம்புறேன் என எல்லோருக்குமாக பொதுவில் சொல்லிவிட்டு கிளம்பினேன். செருப்பு விடும் இடம் வரை வந்துவிட்டேன். எனக்குப்பின்னால் ஏதோ சத்தம், திரும்பிப்பார்த்தால் புஷ்பா!.
நாளைக்கி சண்டே நீங்க சென்டர்க்கு வந்தா நானும் வரேன் இல்லனா வரவேணாம்னு பாக்குறேன். நீங்க வரீங்களா ? என கேட்டாள்.
எனக்கும் சென்டர்க்கு வரவேண்டிய வேலை இருக்கு, நானும் வருவேன் என இல்லாத வேலையை இருப்பது போல சொன்னேன். அவள் வாசல் வரை வந்து என்னை வழியனுப்பியதும், நான் இருக்குமிடத்தில் அவள் இருக்க நினைப்பதும் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.
B.Sc. செமெஸ்டர் எக்ஸாம் வந்துவிட்டது. நான் அதுவரை ஐந்து அரியர்ஸ் சம்பாதித்திருந்தேன். புஷ்பா அரியர்ஸ் பற்றி விசாரித்தாள், சொன்னேன். இங்க பாருங்க, இந்த Semester ல எல்லாத்தையும் க்ளியர் பண்ணிடனும். எத்தன அரியர்ஸ் வைக்கிறீங்களோ, அத்தனை நாள் நான் உங்க கூட பேசமாட்டேன் என்றாள்.
இது என்னடா வம்பு, சுட்டுப்போட்டாலும் நமக்கு வராதது படிப்பு. அதில் இப்படி ஒரு சோதனையா. எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த Semester ல் இரண்டு அரியர் வைத்துவிட்டேன். புஷ்பாவிடம் எப்படி சொல்வது. இரண்டு நாள் பேசாமல் இருப்பதென்பதை என்னால் நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு புஷ்பாவிடம் சென்றேன்.
புஷ்பா மொத்தம் பதினொரு Subject. அதுல ஒன்பது பாஸ். ரெண்டு fail. நீங்க என்கூட ஒன்பது நாள் பேசணும். அதுல ரெண்டு அரியர்ஸ் கழிச்சிடுங்க. So , நீங்க என்கூட எழுநாள் பேசினா போதும். புஷ்பா என்னோட பேசாமல் இருந்துவிட கூடாதென ஏதேதோ உளறினேன்.
அதை அப்படியே புரிந்துகொண்ட புஷ்பா,
உங்க கூட பேசாமல் என்னால மட்டும் இருந்துடமுடியுமா? என்றாள்.
நெஞ்சுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும் என்பார்களே, அதை அன்று தான் உணர்ந்தேன்.
நம்மைப்போலவே தான் புஷ்பாவும் இருக்கிறாள். இது தெரியாமல் நான் வேறு அரியர்ஸை குறைத்துவிட்டேன்.
நண்பர்கள் மத்தியில் மரியாதை இருக்காதே.. என்ன செய்யலாம்... சரி அடுத்த Semester ல் புடிச்சதை விட்டுடலாம்!
ஒரு நாள், அவசரத்தில் ஒரு சட்டையை அணிந்தேன். பிறகு தான் தெரிந்தது அதில் ஒரு பித்தான்(Button) இல்லையென. இனிமேல் கழட்டி மாட்டிக்கொண்டிருக்க முடியாது இப்படியே இருக்கட்டும். இந்த விஷயம் நமக்கும் சட்டைக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாது என கிளம்பி சென்டருக்கு போனேன்.
அங்கே புஷ்பா...என்னைப்பார்த்த மாத்திரத்தில் கேட்டாள்,
என்ன சட்டைல ஒரு Button அ காணோம்?
திருட்டுமுழி முழித்தேன்.
ஒரு காலேஜ் ஸ்டுடென்ட் இந்த மாதிரியா டிரஸ் பண்ணுறது? ஒரு descency வேண்டாம்? நீங்களே இப்படி இருந்தா, உங்க கிட்ட படிக்கிற பசங்க எப்படி இருப்பாங்க?
நான் பாக்கியராஜ் மாதிரி விழித்தேன்.
இந்தாங்க அட்லீஸ்ட் இந்த Safety Pin ஆவது போடுங்க என்றாள்.
இந்த அதட்டல் என்னை கவர்ந்திருந்தது. என்மீதான அவளின் அக்கறை என் ஆழ்மனதில் ஏதோ மாற்றத்தை ஏற்படுத்தியது.
அடுத்த நாள், மிக கவனமாக நல்ல சட்டை ஒன்றை அணிந்து, ஒன்றுக்கு இரண்டுமுறை பித்தான்களை சரி பார்த்துக்கொண்டேன். சென்டருக்கு சென்றேன்.
அங்கே புஷ்பா. அவள் முன்னாடி விறைப்பாக நின்றேன்.
இன்னைக்கி எல்லா button ம் போட்டு இருக்கேன் என்றேன்.
அது சரி, தலை ஏன் வாரல என்றாள்.
சுருக்கென்றது எனக்கு. அடடா சட்டையை சரி பார்க்கும் அவசரத்தில் தலை சீவாமல் வந்துவிட்டேன். மீண்டும் அதே அதட்டல்கள். மீண்டும் அதே மாற்றங்கள் என்னுடைய ஆழ்மனதில்.
எனக்கு அவள் மீது இருப்பது என்ன? அவளுக்கு என்மீது இருப்பது என்ன என நான் அனுதினமும் சிந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில்....
ஒருநாள், புஷ்பா யாரோ ஒருவனிடம் சென்டரில் பேசிக்கொண்டிருந்தாள்.
பேசிமுடித்தவுடன், அந்த நபரைப்பற்றி கேட்டேன்.
அவரு பேரு மாணிக்கம். எங்க அண்ணனோட Friend . ரொம்ப நல்லவரு என்றாள்.
ரொம்ப நல்லவர்னா தேரடி வீதியில அவருக்கு ஒரு சிலைவச்சிடலாம். அதுக்காக நீங்க யார் கூடவும் ஜாஸ்தி பேசவேண்டியது இல்லை என கத்திவிட்டு அவளுடைய பதிலுக்கு காத்திராமல் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

வரும்வழியில், தம்பி.... என யாரோ என்னை கூப்பிட்டார்கள்.
திரும்பி பார்த்தால், என்னுடைய மனசாட்சி.
அவள் யார் கூட பேசணும், பேசக்கூடாதுன்னு சொல்றதுக்கு நீ யாருடா? இல்ல தெரியாம தான் கேக்குறேன் நீ அவளை பத்தி என்ன நெனச்சிகிட்டு இருக்க? என்றது.
டேய் அததாண்டா நான் உன்னை கேக்கறேன். ஒழுங்கா சொல்லு, புஷ்பாவ பத்தி நீ என்ன நெனச்சிகிட்டு இருக்க என நானும் பதிலுக்கு கேட்டேன்.
அது என்னவென்று எனக்கும் தெரியாது என சொல்லி மறைந்துவிட்டது.
அடப்பாவிங்களா ஏன்டா என்னை இப்படி இம்சை பண்ணுறீங்க?
.....
புஷ்பா Windows 95 OS கம்ப்யூட்டர் வாங்கி இருந்தாள். நான் DOS ஐ தவிர வேறெதையும் பார்த்திராதவன். Windows 95 எப்படி தான் இருக்கு என பார்க்க புஷ்பா வீட்டிற்கு சென்றேன். அவள் வீடு ஊரை விட்டு 8 கிலோ மீட்டர் தள்ளி இருந்தது. நான் சைக்கிளில் தான் சென்றேன்.
என்னைப்பார்த்ததும், இவ்வளவு தூரம் சைக்கிள்லயா வந்தீங்க? என கேட்டாள்.
ஆமாம் சரியான கால் வலி என்றேன்.
அப்படியா, நான் வேணும்னா தைலம் தேச்சி விடட்டுமா என்றாள். எனக்கு பகீரென்று இருந்தது. என்னடா இது, அக்கறையின் உச்சமாக இருக்கிறதே என.
அன்று வீடு திரும்பியதிலிருந்து எனக்குள் ஒரே குழப்பம். அவள் என்மீது வைத்து இருப்பது சாதாரண அன்பு, அக்கறை தானா இல்லை காதலுமா? விளங்கவில்லை.
மறுநாள் சென்டெரில் அவளை பார்த்தபோது வெகு சாதாரணமாக இருந்தாள். எனக்கு தான் ஏதோ சரி இல்லாதது போல இருந்தது. என்ன புஷ்பா எப்படி இருக்கீங்க?
எனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க. நான் மேல படிக்கிறேன்னு தான் சொன்னேன். ஆனா அம்மா தான் பிடிவாதமா சம்மதிக்க வச்சிட்டாங்க என்றாள்.
எனக்கு இது நல்ல சேதியா கெட்ட சேதியா என்றே புரியவில்லை. இதற்கு நான் எப்படி பதிலளிக்க வேண்டும் என்றும் தெரியவில்லை. உணர்ச்சியே இல்லாமல் "அப்படியா" என்றேன்.
ஆமா நாளைக்கி எங்க குடும்பத்துல இருந்து எல்லாரும் மாப்பிள்ளை பாக்க போறாங்க. நீங்களும் அவுங்க கூட போயிட்டு வரணும்.
இடி மேல் இடி விழுந்தது.
மாப்பிள்ளை எப்படி இருக்காரு? போட்டோ பார்த்தீங்களா?
போட்டோ பாக்கல ஆனா மாப்பிள்ளை Red Rose கலர் என்று சொன்னார்கள்.
மறுநாள் மாப்பிள்ளையை பார்த்தேன். கறுப்பாக இருந்தார். Red Rose ற்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் என்றே தெரியவில்லை.
அடுத்த நாள், புஷ்பா என்னிடம், மாப்பிள்ளை பார்த்தீங்களா? கலர் எப்படி?
Red Rose தான் ஆனா பூத்து பத்து நாள் ஆன மாதிரி இருக்கார் என்றேன் கடுப்புடன்.
.....
கல்யாணத்திற்கு நாள் குறித்துவிட்டார்கள். அடுத்த வாரம் கல்யாணம்.
புஷ்பா கல்யாண சடங்குகள் நிமித்தமாக சென்டருக்கு வருவதில்லை.
அவள் இல்லாத சென்டருக்கு நானும் போவதில்லை.
திடீரென எனக்கு காய்ச்சல் வந்தது. டாக்டரிடம் சென்று மருந்து மாத்திரை வாங்கி சாப்பிட்டும் காய்ச்சல் சரியாகவில்லை. நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போனது. கல்யாணத்துக்கு இன்னும் இரண்டு நாள் தான் இருக்கிறது.
இப்போது எனக்கு 106 டிகிரி. ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகிவிட்டேன். டாக்டர் கையை பிசைந்துகொண்டு இருக்கிறார். இன்னும் ரெண்டு டிகிரி அதிமானா உயிருக்கே ஆபத்து. I will do my level best என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
எனக்கு நினைப்பெல்லாம் புஷ்பாவின் மீதும் கல்யாணத்தின் மீதும் இருந்தது.

திடீரென புஷ்பா, அவள் அம்மா, அப்பா மற்றும் வருங்கால கணவருடன் உள்ளே நுழைந்தாள். படுத்துக்கொண்டிருந்த என்னை வாரியனைத்துக்கொண்டு கண்ணீர்விட்டு கதறி அழுகிறாள். உங்களுக்கு இப்படி ஆனத ஏன் என்கிட்டே சொல்லல? சென்னைக்கு கெளம்பி போய் பெரிய டாக்டர்கிட்ட காட்டவேண்டியது தான... கவலைபடாதீங்க நான் இருக்கிறேன். உங்களுக்கு ஒன்னும் ஆகாது என்கிறாள்.
நான் கண்ணீருடன் அவளின் அருகாமையின் பரவசத்தை அனுபவித்துக்கொண்டிருந்தேன்.
அவளின் அணைப்பின் வெம்மையை நான் இதற்கு முன் எங்கோ உணர்ந்திருக்கிறேன். அவள் ஸ்பரிசம் தரும் பாதுகாப்பை நான் கடந்து வந்திருக்கிறேன். இந்த தூய அன்பினை நான் பருகி இருக்கிறேன். ஆனால் எங்கே? எப்போது? யாரிடம்?
.......புரிந்தது.......அது என் தாயிடம்.
குடும்பத்தினர் அனைவரும் இருக்கையில், இப்படி என் மீது பாசமழை பொழிகிற இவள் நிச்சயம் காதலியாக இருக்க முடியாது. காதலிக்கு இடம் பொருள் ஏவல் என பல தடைகள் உண்டு. காதலுனுக்காக உயிரையும் தருவேன் என காதலி கூறிக்கொண்டிருக்கும் நேரத்தில் தன் குழந்தைக்காக உயிரை மாய்த்திருப்பாள் தாய்.
இப்பொழுதுதான் அவளின் தாயுள்ளம் எனக்கு புரிந்தது . ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் காதல் மட்டும் தான் இருக்க வேண்டுமென்பதில்லை. அதை விட உன்னதமான சில உறவுகளும் இருக்கலாம் என்பதை தீர்க்கமாக புரிந்துகொண்டேன்.
என்னருகிலிருந்து எழுந்தாள். கல்யாணத்திற்கு இன்னும் ரெண்டு நாள் இருக்கு. அதுக்குள்ள நீங்க கண்டிப்பா நல்லா ஆயிடுவீங்க. கல்யாணத்துல உங்களுக்காக நான் வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பேன் ஓகே வா? என்றாள்.
தெளிந்த மனதுடன்...சரி என்றேன்.
அப்போ நான் கெளம்புறேன்....கல்யாணத்துல பார்போம் என சொல்லிப்பிரியும் அவள்....

என் சகோதரி மட்டும் அல்ல, என் உற்ற தோழி மட்டும் அல்ல...........
என் தாயும் ஆனவள்........ தாயுமானவள்.!

-Ashok M

11 comments:

  1. Fantasti story

    Mothe'sr love, really heart breaking.

    Romba nallairukku.

    Keep going

    ReplyDelete
  2. machi...intha mathiri touching'a ezuthura allavakku nee avvalo nallavana????

    ReplyDelete
  3. Initially it was Romantic..so I was greatly involved into the story
    Finally it ended with (unconditional)realistic mother's Love.

    ReplyDelete
  4. Ashok...U can be story writer...Eppadi..lover a mummy akura vellai a parkamal..Lover kitta amma paasam parkiringa..Engeyoo poitinga..Good one..I really enjoyed reading it. Myself Rajesh(Got ur link in Orkut community "Chennai Makkal in Japan"

    ReplyDelete
  5. Venkatesh,
    நான் நல்லவன்தான்னு சொன்னா இப்போவாவது நம்புங்க!

    ReplyDelete
  6. Hi Rajesh (Orkut, Chennai Makkal in Japan),
    Thanks for your comments!!

    ReplyDelete
  7. Ashok,
    kathai ullathai allitha mathiri poi kadaisila anbe sivam maadiri mudichitingale...arumai...

    ReplyDelete
  8. Bala...
    ungalukku pudikkalannaa sollunga...kadhaiya maathiduvom..!

    ReplyDelete
  9. ashok ippadi ungalukkula olinjirukkura sujathavae pathi sollavae illae !! mmm romba nalla irukku, idhu padippa illae manasulla patta padippa?

    ReplyDelete